Thursday, February 5, 2015

சூரியனின் ஏழு குதிரைகளும் ஒளியின் ஏழு நிறங்களும்.

         இந்து மதத்தில் சூரியனை இறைவனாகவும், நவக்கிரகங்களில் முதல் கிரகமாகவும் வைத்து வழிபாடு செய்கிறார்கள். அவரே வெப்பம் மற்றும் ஒளியின் கடவுள். இந்து மத நம்பிக்கையில் சூரிய பகவானின் வாகனமாக ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட ரதம் அமைக்கப்பட்டுள்ளது.

ஏழு குதிரைகள் உடைய ரதத்தில் சூரிய பகவான் 
     பழைய கோவில்களில் சூரிய பகவானுக்கென்று தனி சன்னிதி அமைக்கப்பெற்று அதில் அவர் ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் இருப்பது போல் சிலைகள் அமைக்கப் பட்டிருப்பதைப் பார்க்கின்றோம்.


             
                   இந்த ஏழு குதிரைகள் எதற்கு? ஒரு குதிரை போதாதா? இதில் ஒளியின் தத்துவத்தை ஒளிக் கடவுளின் சிலை வடிவமைப்பில் கொடுத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். சூரியனின் ஒளி வெள்ளை நிறமுடையது. உண்மையில் வெள்ளொளி என்பது ஏழு நிறங்களின் தொகுப்பே. அவை  - ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், இளஞ்சிவப்பு மற்றும் சிவப்பு (VIBGYOR - Violet, Indigo, Blue, Green, Yellow, Orange, Red) ஆகியவையே.


Dispersion of light in a glass prism 

ஏழு  நிறங்களாகப் பிரியும் வெள்ளை ஒளி 

        Prism எனப்படும் பட்டகத்தில் வெள்ளொளி உட்புகும் போது அது ஏழு வண்ணங்களாகப் பிரியும். வானவில்லின் தத்துவமும் அதுவே. மழை பெய்யும் போது மழை நீர் பட்டகம் போல் செயல் பட்டு வெள்ளொளியை ஏழு வண்ணங்களாகப் பிரிக்கிறது. அதாவது வானவில்லில் தோன்றும் ஏழு வண்ணங்களும் வெள்ளை ஒளியில் இருக்கும் ஏழு வண்ணங்களாகும்.  

வானவில்லின் ஏழு வண்ணங்கள் 

              வெள்ளை நிறத்தை வழங்கும்  ஒளிக் கடவுளான சூரிய பகவானுக்கு ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட தேரை வடிவமைத்ததன் மூலம் 'வெள்ளொளியில் இருக்கும் ஏழு வண்ணங்கள்' தத்துவம் தெளிவாக உணர்த்தப்பட்டுள்ளது. இது நமது முன்னோர்களால் கோவில்களில் பாதுகாத்து வைத்துச் செல்லப்பட்ட  அறிவியல்.


#சூரியன் #சூரிய பகவான் #VIBGYOR #ஏழு குதிரைகள்