Monday, November 23, 2015

பாரதியா? வாலியா?

 


இந்த இரு வேறு கவிஞர்கள் எழுதிய, பெரும் வெற்றியடைந்த இரு வேறு பாடல்களைக் கேட்கும் போது ஒரு விஷயம் சிந்திக்க வைக்கிறது. முதலில் பாரதி: 

"விசையுறு பந்தினைப் போல் - உள்ளம்

வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்."
மனம் நினைத்த வேகத்தில், நினைத்த விஷயத்தை உடல் செய்து விட வேண்டும் என்கிறார்.

    கவிஞர் வாலி தனது "கண் போன போக்கிலே கால் போகலாமா?" என்ற பாடலில்
                             "மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?

மனிதன் போன பாதையை மறந்து போகலாமா?"
மனம் நினைத்ததையெல்லாம் மனிதன் செய்தால் என்ன ஆகும்? தோல்வி, வேதனை தான் மிஞ்சும் என்கிறார். எது சரி என்று தெரியவில்லை. கால நிலைக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப இந்த இரண்டு கவிஞர்களும் எழுதியிருக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாம். #வாலி #பாரதியார் .