ஜோதிடம் என்பது பலரும் தங்கள் வாழ்க்கையின் முக்கியமான நேரங்களில் பார்க்க நினைக்கும் விஷயம். ஒருவரின் பிறந்த நேரத்தைக் கொண்டு, அப்போது இருந்த கிரக நிலைகளை ஆராய்ந்து தற்கால பலன்களை ஜோதிடர்கள் கூறுகிறார்கள். உண்மையில் இது மட்டுமே ஜோதிடம் என்று நினைத்தால் அதில் உண்மை இல்லை. வானில் உலவும் கிரகங்களை மட்டுமே வைத்துப் பலன் கூறுவது மட்டுமே ஜோதிடம் இல்லை. அந்தக் கலையின் (அல்லது அறிவியலின்) பெயர் வான சாஸ்திரம் அல்லது வானவியல் அல்லது வானியல் ஆரூடம். இன்றைய நவீன வானவியல், செயற்கைக் கோள் துணை கொண்டு ஆராய்ந்து கூறும் அதே விஷயங்களை இந்து மதம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே விளக்கி விட்டது.
அறிவியல் காட்டும் கிரகங்களின் அமைப்பு |
இந்துக் கோவில்களின் நவகிரக அமைப்பு |
சரி. இப்போது நாம் கூற வருவது அது அல்ல. ஜோதிடம் என்றால் என்ன என்பதைத் தான் நாம் விளக்க முற்படுகிறோம். நாம் மேலே பார்த்த வான சாஸ்திரம் ஜோதிடத்தின் ஒரு பகுதி மட்டுமே. வான சாஸ்திரம் போலவே - சகுனங்கள், உடற்கூறு லட்சணம், தீர்க்க தரிசனம், வாஸ்து சாஸ்திரம், கைரேகை சாஸ்திரம், மருத்துவம், வானிலை, பட்சி சாஸ்திரம் என்று பல பிரிவுகளை உள்ளடக்கியது தான் ஜோதிடம் என்னும் க(டல்)லை. ஒரு தேர்ந்த ஜோதிடரிடம் மேற்கண்ட அனைத்து விஷயங்களிலும் தன்னை நாடி வரும் மனிதர்களின் சந்தேகங்களுக்கு விடைகள் இருந்தன.
ஜோதி |
'ஜோதி இருக்கும் இடம்' என்பதையே 'ஜோதிடம்' என்று அந்தக் கால மக்கள் அழைத்தனர். சில கேள்விகளும் சந்தேகங்களும் ஒருவரை இருளில் வைத்திருக்கும் போது ஒளி என்னும் ஜோதியைத் தேடிச் செல்லும் வேலையைத் தான் 'ஜோதிடம் பார்த்தல்' என்று அழைத்திருக்கிறார்கள். பொதுவாக இருட்டில் இருக்கும் மக்கள் தான் ஜோதியைத் தேடிச் செல்ல வேண்டும். ஜோதி அவர்களைத் தேடி வராது.
(ஆனால் இன்றைய ஜோதிடம் நவீனமாகி, தன்னுடைய இதர பிரிவுகளை இழந்து வான சாஸ்திரத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இருக்கிறது. உண்மையில் ஜோதிடத்தின் ஒவ்வொரு பிரிவும் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையது. உடல் கூற்றியல், வான சாஸ்திரம், மருத்துவம் என்று அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையவையே.)
#jothidam, #ஜோதிடம் #தமிழ்ஜோதிடம்