இந்து சமயத்தில் 'பலி கொடுத்தல்' என்பது பிரபலமாக உள்ள ஒரு சடங்காகும். 'ஆகமம்' என்று அழைக்கப்படும் இந்து மத விதித் தொகுப்புகளில் பலி கொடுத்தல் சடங்குகள் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் இந்த வழக்கம் தொன்று தொட்டுப் பின்பற்றப்படுகின்றது. குறிப்பாக அம்மன், முனியப்பன் போன்ற தெய்வங்களுக்கு சிற்றுயிர்களான கோழி, ஆடு, பன்றி போன்றவற்றைக் கோவில்களுக்குக் கொண்டு சென்று தெய்வங்களின் முன்னிலையில் அவைகளைக் கொன்று பலியிடுவது நடைமுறையில் உள்ள வழக்கமாகும். அவ்வாறு பலியிடப்படும் உயிர்கள் இறைவனின் திருவடியைச் சென்றடையும் என்பதும் இந்துக்களின் நம்பிக்கைகளில் ஒன்று.
பலி கொடுத்தல் சடங்கு |
அவ்வாறு பலி கொடுக்கக் கொண்டு செல்லப்படும் விலங்குகளை மாலையிட்டு உரிய மரியாதையுடன் அழைத்து வருகிறார்கள். மேலும் அந்த மிருகத்தை வெட்டுவதற்கு முன் 'துலுக்குக் கேட்பது' என்கிற உபசடங்கு செய்கிறார்கள். அதாவது அந்த ஆட்டையோ கோழியையோ வெட்டுவதற்கு முன் அது தனது தலையை உதற வேண்டும். முடி குத்திட்டு நிற்கும் மிருகத்தைப் பொதுவாக வெட்டுவதில்லை.
அம்மன் கோவில் |
இந்தத் 'துலுக்குக் கேட்கும்' முறை எதற்காகப் பின்பற்றப் படுகிறது? இதன் அறிவியல் பூர்வமான விளக்கத்திற்குச் செல்லும் முன்னர் நமது உடலில் இருக்கும் 'அட்ரினல்' என்கிற சுரப்பியைப் பற்றியும் அது சுரக்கும் 'அட்ரினலின்' என்ற ஹார்மோனைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம். நமது உடலில் சிறுநீரகத்தின் மேற்பகுதியில் அளவில் சிறிய ஒரு ஜோடி சுரப்பிகள் 'அட்ரினல்' என்ற பெயரில் உள்ளன. அதன் வேலை என்னவென்றால், ஆபத்துக் காலங்கள், உயிரைத் தற்காத்துக் கொள்ள வேண்டிய தருணங்களில் நமது உடலின் சக்தியை அதிகப் படுத்துவது தான். பல்வேறு வேதி மாற்றங்களை நமது உடலில் இந்த அட்ரினலின் ஹார்மோன் செய்கிறது.
இந்த அட்ரினலின் ஹார்மோன், பலியிடப் போகும் அந்த மிருகங்களின் உடலில் சுரந்து அந்தக் கோழியையோ ஆட்டையோ ஒரு அசாதாரண நிலையில் வைத்திருக்கும். அந்த நிலையில் உள்ள இறைச்சி நாம் உண்ணத் தகுந்ததல்ல.அந்த மிருகங்களின் மனதில் ஏற்படும் பயத்தின் காரணமாகவே அட்ரினலின் சுரப்பு ஏற்படுகிறது. சிறிது நேரத்தில் அவைகளின் பயம் தெளிந்து சாதாரண நிலைக்கு வருகின்றன. அதற்கு அறிகுறியாகத் தனது தலையைக் குலுக்குகிறது. அவைகளின் மிரண்ட கண்கள் சாதாரண நிலைக்கு வருவதை நாம் கவனிக்க முடியும். அப்போது அட்ரினலின் சுரப்புக் குறைவதால் அந்த மிருகத்தின் இறைச்சி உண்ணத் தகுந்ததாக ஆகிறது. இதுவே 'துலுக்குக் கேட்கும்' சடங்கின் அர்த்தமும் அறிவியலும்.
டெயில் பீஸ்:
முஸ்லிம்கள் ஹலால் செய்த இறைச்சியை மட்டுமே உண்ணுவதும் இந்த 'அட்ரினல்' விவகாரம் காரணமாகத்தான். ஹலாலில் வலி உணர்த்தும் நரம்பினை முதலில் அறுப்பதாலும் பெரும்பான்மையான ரத்தத்தை வெளியேற்றி விடுவதாலும் அந்த இறைச்சி உண்ணத் தகுந்ததாக ஆகிறது.
#அட்ரினலின் #மிருகபலி #பலிகொடுத்தல்சடங்கு
#அட்ரினலின் #மிருகபலி #பலிகொடுத்தல்சடங்கு