Friday, August 22, 2014

யோகி, போகி, ரோகி.... யார்?

"ஒரு வேளை உண்பான் யோகி
 இரு வேளை உண்பான் போகி
 மூவேளை உண்பான் ரோகி"
          என்று உணவு உண்ணுதலைப் பற்றி எடுத்துரைக்கிறது சித்த மருத்துவம். 
  ஒரு வேளை மட்டும் சாப்பிட்டால் யோகமாம்; யோகம் என்பதற்கு 'அதிர்ஷ்டம்' என்ற அர்த்தமும் இருக்கிறது. உணவை ஒரு நாளில் ஒரு வேளை மட்டுமே உண்டு அதிலேயே அப்படியே வாழ முடிந்தவன், வாழத் தெரிந்தவன் யோகி - அதிர்ஷ்டசாலி.
    இரண்டு வேளை சாப்பிடுபவன் போகியாம்; போகம் என்றால் சுகமாக, வசதியாக வாழ்வது. வசதியாக வாழ முடிபவன், வாழ விரும்புகிறவன் இரண்டு வேளை சாப்பிடலாமாம். 
        மூன்று வேளை சாப்பிடுபவன் ரோகியாம்; ரோகம் என்றால் நோய். மூன்று வேளை சாப்பிடுபவன் நோயாளியாவான். 

           ஆனால் நாம் டீ, காபி சேர்த்து குறைந்தது ஐந்து வேளை சாப்பிடுகிறோம். 

                     
                        சித்தர்கள் ஜீவ சமாதி அடைந்து விட்டனர்; நல்லவேளை...   

                                                                                                Posted By: Kiruthika Vishnu.
#சித்தர்கள் #யோகி #போகி #ரோகி 

Saturday, August 9, 2014

தேரை ஓட்டுவது இங்கே யார்?



    
     மகாபாரதக் கதையில் போர்க் களத்தில் பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்குத் தேர் ஓட்டுகிறார். (பார்த்திபனாகிய அர்ஜுனனுக்கு சாரதியானதார். அதனாலேயே அவர் பெயர் பார்த்தசாரதி.) அர்ஜுனனை வெற்றி பெறச் செய்கிறார். இளவரசன் அர்ஜுனனுக்கு தேரோட்டிகள் தட்டுப்பாடு ஏற்பட்டு விட்டதா? கிருஷ்ணர் ஏன் தேரை ஓட்ட வேண்டும்? அவர் வெறும் டிரைவரா? இல்லை. Driving Force. அர்ஜுனன் தனது தேரை ஓட்டுபவனாக பகவானை நினைக்கவில்லை. தன்னைச் செலுத்தும் விசையாக பகவானை நினைத்தான். வழிகாட்டியாக ஏற்றான். வெற்றியை அடைந்தான்.

He is the Driving Force.
             அர்ஜுனன் என்னும் மனம் வாழ்க்கை என்னும் தேரைக் கடவுளிடம் ஒப்படைக்கும் போது தான் வெற்றியை அடையும். வாழ்க்கை என்னும் வண்டியை அவனிடம் ஒப்படைத்து விட்டால் போதும். வண்டியிலே பிரேக் சரியாக வேலை செய்கிறதா? என்ன வேகத்தில் ஓட்டுவது? பெட்ரோல் எப்போது தீரும்? அனைத்தையும் அவன் பார்த்துக் கொள்வானே! It is as simple as that. அவன் நாம் போக நினைக்கும் இடத்தில் கொண்டு சேர்ப்பான். என் வண்டியை நானே ஓட்டிக் கொள்ளவும் முடியும். அப்போது எல்லாப் பொறுப்புக்களும் என்னுடையது அல்லவா? எனக்கு இது போல்  tension-free travel கிடைக்குமா? கடவுள் நம்பிக்கையுடன் வாழ்வதற்கும் அது இல்லாமல் வாழ்வதற்கும் இதுவே வித்தியாசம். 

                                                                                      Posted By: Kiruthika Vishnu.