Friday, August 22, 2014

யோகி, போகி, ரோகி.... யார்?

"ஒரு வேளை உண்பான் யோகி
 இரு வேளை உண்பான் போகி
 மூவேளை உண்பான் ரோகி"
          என்று உணவு உண்ணுதலைப் பற்றி எடுத்துரைக்கிறது சித்த மருத்துவம். 
  ஒரு வேளை மட்டும் சாப்பிட்டால் யோகமாம்; யோகம் என்பதற்கு 'அதிர்ஷ்டம்' என்ற அர்த்தமும் இருக்கிறது. உணவை ஒரு நாளில் ஒரு வேளை மட்டுமே உண்டு அதிலேயே அப்படியே வாழ முடிந்தவன், வாழத் தெரிந்தவன் யோகி - அதிர்ஷ்டசாலி.
    இரண்டு வேளை சாப்பிடுபவன் போகியாம்; போகம் என்றால் சுகமாக, வசதியாக வாழ்வது. வசதியாக வாழ முடிபவன், வாழ விரும்புகிறவன் இரண்டு வேளை சாப்பிடலாமாம். 
        மூன்று வேளை சாப்பிடுபவன் ரோகியாம்; ரோகம் என்றால் நோய். மூன்று வேளை சாப்பிடுபவன் நோயாளியாவான். 

           ஆனால் நாம் டீ, காபி சேர்த்து குறைந்தது ஐந்து வேளை சாப்பிடுகிறோம். 

                     
                        சித்தர்கள் ஜீவ சமாதி அடைந்து விட்டனர்; நல்லவேளை...   

                                                                                                Posted By: Kiruthika Vishnu.
#சித்தர்கள் #யோகி #போகி #ரோகி 

No comments:

Post a Comment