முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று திருசெந்தூர். அதன் முந்தைய பெயர் 'சீரலைவாய்' அல்லது 'திருச்சீரலைவாய்'. 'சீரான அலைகள் உருவாகும் கடலை வாசலாகக் கொண்ட ஊர்' என்பது தான் இதன் அர்த்தம். இது ஒரு கடல் சார்ந்த இடம்.
திருச்சீரலைவாய் |
முருகப் பெருமான் சூரன் என்ற அசுரனைப் போரிட்டு அழிப்பதற்காக, ஒரு போர்வீரனாக, படைத்தளபதியாக, இந்த ஊரில் இருந்துதான் புறப்பட்டுச் சென்றார். வீரத்துடனும், நெற்றியில் செந்தூரத்துடனும் காட்சி தந்ததால் அவர் 'செந்தில் குமரன்' என்று அழைக்கப் பட்டார். அதன் காரணமாகவே இந்த ஊர் 'செந்தூர்' அல்லது 'திருச்செந்தூர்' என்று அழைக்கப் படுகிறது.
போர்க்கோலத்தில் திருசெந்தூர் முருகன் |
கடலின் சீற்றமான 'சுனாமி' க்குத் தமிழில் 'கடல் கோள்' என்று பெயர். அதாவது, கடல் நிலத்தினைக் 'கொள்ளுதல்' அல்லது 'தனக்காக எடுத்துக் கொள்வது' என்று பொருள். இது வரை தமிழகத்தில் நடந்த அத்தனை கடல் கோள் (சுனாமி) களிலும் திருசெந்தூர் மட்டும் பாதிக்கப்படாமல் இருந்து வந்துள்ளது. (2004 ஆம் ஆண்டு சுனாமியிலும் திருசெந்தூர் மட்டுமே பாதுகாப்பாக இருந்த கடற்கரை நகரமாகும்.)
திருசெந்தூர் கோவில் |
கடலுக்குள் என்ன நடந்தாலும் இந்த ஊரில் மட்டும் கடல் அலைகள் ஆட்டம் காணாமல் சீராகவே இருக்கும் என்பதை அறிந்து, தமிழ் அறிஞர்கள் இந்த ஊருக்கு 'சீரலைவாய்' என்று பெயர் கொடுத்திருக்கிறார்கள். இது தான் தமிழ் நாகரீகத்தின் (தீர்க்க தரிசனம்) காலக் கணிப்பு!
#திருசெந்தூர் #திருச்சீரலைவாய் #சீரலைவாய் #சுனாமி
#முருகன் #தீர்க்கதரிசனம் #காலக்கணிப்பு #தமிழ்நாகரீகம்
#Thiruchendur #Murugan #Tsunami
No comments:
Post a Comment