உலகின் தொன்மையான நாகரிகங்களில் தமிழ் நாகரிகமும் கிரேக்க நாகரிகமும் முக்கிய இடத்தைப் பெறுபவை. இரண்டும் சமகால நாகரிகங்கள். மேலும் இந்த இரண்டு நாகரிகங்களிலும் பின் தொடரப்பட்ட வழிபாட்டு முறைகளும் ஒன்றுகொன்று தொடர்பு உடையவையாக இருக்கின்றன. மத நம்பிக்கைகளும் இந்த இரண்டு நாகரிகங்களிலும் ஒன்று போலவே இருந்திருக்கின்றன. இந்து மதத்தால் விஞ்ஞானப் பூர்வமாக அறியப் பட்ட உண்மைகளே கிரேக்க மதமான பாகனிசத்திலும் (Paganism) அறியப்பட்டுள்ளது.
தமிழ் ஜோதிட சாஸ்திரத்தில் புத்திக் காரகனான புதனுக்கு ஆங்கிலத்தில் 'மெர்குரி' (Mercury) என்று பெயர். 'பாதரசம்' என்று தமிழில் குறிக்கப்படும் திரவ உலோகம் தான் இந்த மெர்குரி. பாதரசம் ஒரு உலோகம். ஆனால் அது திரவ நிலையிலேயே இருக்கும். திரவப் பொருளில் திடப் பொருளின் குணங்கள் அடங்கியது தான் மெர்குரி. அது திடப் பொருளுடன் சேரும் போது திடப் பொருளின் தன்மைகளையும், திரவப் பொருளுடன் சேரும் போது திரவத்தின் தன்மையையும் பெறுகிறது.
புதன் கிரகம்
தமிழ் ஜோதிட சாஸ்திரத்தைப் பொறுத்தவரை, புதனை 'அலி கிரகம்' என்று குறிப்பிடுகின்றனர். அதாவது, ஆணின் குணங்களும் பெண்ணின் குணங்களும் இணைந்த ஒரு கிரகம். ஆண் கிரகங்களுடன் (உ-ம்: செவ்வாய்) சேரும் போது ஆண் கிரகமாகவும் பெண் கிரகங்களுடன் (உ-ம்: சுக்கிரன்) சேரும் போது பெண் கிரகமாகவும் தன்மைகளைப் பெறுகிறது. பாவக் கிரகங்களுடன் சேரும் போது பாபத் தன்மையையும் சுபக் கிரகங்களுடன் சேரும் போது சுபத் தன்மையையும் பெற்று விடுகிறது.
புதன் கிரகத்தின் இந்த குணாதிசயம் இரண்டு நாகரிகங்களிலும் வெவ்வேறு விதங்களில் உணர்த்தப் பட்டிருந்தாலும் பொதுவான தன்மைகள் ஒன்றாகவே இருக்கின்றன. (Though the interpretations are different, the properties are the same.) பார்வைகள் தான் வேறு; விஷயம் ஒன்று...
புதன் கிரகம்
பாதரசம் (Mercury)
புத பகவான்
கிரேக்கத்தில் புத பகவான் (Lord Mercury in Greek Mythology )
No comments:
Post a Comment