அருள் தரும் திருமகள் |
இந்த நாளைப் பற்றிப் புராண, இதிகாச மேற்கோள்கள் பல உண்டு, பரசுராமர் அவதரித்த தினம், மகாபாரதத்தில் யுதிஷ்டிரன் அக்ஷய பாத்திரம் பெற்ற தினம், பாற்கடலில் மகாலட்சுமி அவதரித்து, மகாவிஷ்ணுவை அடைந்த தினம் என்று பல மேற்கோள்கள். சரி... இந்த அக்ஷய திரிதியைக்கும் தங்கத்திற்கும் என்ன சம்பந்தம்?
திரிதியை நிலவு |
இந்த வார்த்தையைப் பிரித்துப் பார்த்தால் பொருள் அறியலாம். 'க்ஷய' என்றால் 'தேய்கிற' என்று பொருள். 'அக்ஷய' என்பது அதன் எதிர்ப் பதம். அதாவது, 'வளர்கிற' என்று பொருள். நமது முந்தைய பதிவு ஒன்றில் திதிகள் பற்றிப் பார்த்திருக்கிறோம். ஒவ்வொரு மாதத்திலும் வளர்பிறையிலும், தேய்பிறையிலும் வரக்கூடிய மூன்றாவது திதி திரிதியை திதி. 'அக்ஷய திரிதியை' என்றால் 'வளர்பிறைத் திரிதியை' என்பது மட்டுமே சாஸ்திரங்கள் கொடுக்கும் விளக்கம். பொதுவாகவே மூன்றாம் பிறையான திரிதியை திதி நல்ல நாளாக மக்களால் பார்க்கப் படுகிறது; ஆகவே அந்தக் காலத்தில் வருடத்தின் முதல் மாதமான சித்திரையின் வளர்பிறை மூன்றாம் நாளில் புதுக்கணக்கை ஆரம்பிப்பதோ தானியங்கள் வாங்குவதோ செய்யப்பட்டிருக்கலாம். மேலும் வேறு ஏதேனும் வாங்குவதும் அந்த நாளில் செய்யப்பட்டிருக்கும்; அதனால் ஒரு துவக்கத்தின் அடையாளமாகவே சித்திரை வளர்பிறை மூன்றாம் நாள் பார்க்கபட்டிருக்கலாம். அதுவே தொடர்ந்தும் இருக்கலாம். தங்கம் மட்டுமே இப்போது விளம்பரமும் வியாபாரமும் படுத்தப் படுகிறது.
அக்ஷய திரிதியை விற்பனை |
இந்த நாளில் தான தருமங்கள் செய்வது நல்லது என்பதும் உண்மை; அது ஏனோ பிரபலமாகவில்லை. முனிவர்கள் யாகங்கள் செய்ய ஆரம்பிக்கத் தேர்ந்தெடுப்பதும் இந்த நாளைத்தான். இந்த நாளில் இறைவனின் அருளைப் பெற வேண்டுமானால் தங்கம் வாங்க வேண்டும் என்ற நம்பிக்கை தவறு. தங்கம் வாங்க முடிந்தவர்களுக்கு ஒரு விதமான அருளையும் வாங்க முடியாதவர்களுக்கு ஒரு விதமான அருளையும் இறைவன் வழங்குவதில்லை; அவன் அருள் அந்த வானத்தைப் போன்று அனைவருக்கும் பொதுவானது.
#அக்ஷய திரிதியை #தங்கம்
#அக்ஷய திரிதியை #தங்கம்
No comments:
Post a Comment