Showing posts with label ஜோதிடம். Show all posts
Showing posts with label ஜோதிடம். Show all posts

Sunday, December 17, 2017

சனிபகவான் - சில விவரங்கள்!

                  வரும் 19.12.2017 செவ்வாய்க் கிழமை (ஹேவிளம்பி, மார்கழி 4) அன்று சனிப் பெயர்ச்சி. சனி பகவான் விருச்சிகம் ராசியில் இருந்து தனுசு ராசிக்குப் பெயர்கிறார். அவரவர் ராசிகளுக்கு என்னன்ன பலன்கள் என்று தெரிந்து கொள்வதில் அனைவருக்குமே ஆர்வம் இருக்கிறது. இந்த முறை மீம் மற்றும் வீடியோ வடிவங்களில் பலன்கள் வெளிவந்திருக்கின்றன. நிறையப் பேர் படித்து முடித்து விட்டோம். இப்போ சனிப் பெயர்ச்சியின் கதாநாயகனைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கான நேரம்.

  • சனி பகவான் சூரியனில் இருந்து (பூமியில் இருந்தும்) மிகவும் தள்ளி அமைந்திருக்கும் கிரகம். அதனால் சுற்றுப் பாதை மிகவும் பெரியது (Huge Orbit). அதனாலேயே ஒரு ராசியைக் கடக்க எடுத்துக் கொள்ளும் கால அளவு அதிகம். (இரண்டரை முதல் மூன்று ஆண்டுகள்). மந்தன் (Slower planet) என்று அழைக்கப்படுகிறார்.
  • வெளிவட்டம் (Outer Ring) உடைய ஒரே கிரகம் சனி தான்.
சனிக் கோள் 
  • சனி பகவான் நீல நிறம் அல்லது கருப்பு நிற உடல் கொண்டவர் என்று நம்பப்படுகிறார். அவர் காகத்தைத் தனது வாகனமாகக் கொண்டு இருப்பவர். அதனால் தான் சனிக் கிழமைகளில் காகத்திற்கு உணவு வைப்பதை ஒரு பழக்கமாக வைத்திருக்கிறோம். அதற்கான காரணத்தையும் இங்கே படிக்கலாம். 
காக வாகனத்தில் சனி பகவான் 
  • சனியை 'நீதிக்கோள்' என்று ஜோதிடர்கள் அழைக்கிறார்கள். அவர் ஒரு நீதிமான் ஆவார். நமது செயல்கள் விளைவிக்கும் நன்மை தீமைகளுக்கு ஏற்ற பலன்களைக் கண்டிப்பும் கறாருமாகக் கொடுக்கிறார். அதனால் தான் பயம் கலந்த மரியாதையுடன் அவர் பார்க்கப் படுகிறார்.
  • ஒருவரது சுய ஜாதகத்தில் சனி பகவான் வலிமையாக (ஆட்சி அல்லது உச்ச நிலைகள் என்று ஜோதிடர்கள் கூறுவார்கள்.) இருந்தால் அவர்கள் கண்டிப்பான சுபாவம் உடையவர்களாகவும் நியாயவாதிகளாகவும் இருக்கிறார்கள்.
சந்தனக் காப்பு 
  • "எல்லாப் புகழும் இறைவனுக்கே!" என்பார்கள். இந்தக் கலியுகத்தில் எல்லா இகழ்ச்சிகளும் (திட்டு வாங்குறார்!) சனீஸ்வரனுக்குத் தான். அவரவர் சுய ஜாதகத்தில் வேறு கிரகத்தினால் (உதாரணம் - ராகு, கேது) ஏற்படும் பிரச்சினைகளுக்குக் கூடச் சாதாரணமாக "சனி பிடிச்சு ஆட்டுது" என்று திட்டுகிறோம். (ஏனென்றால் இது கலியுகம். சனிக்கு இன்னொரு பெயர் கலி.)
  • சனி பகவான் ஏழரைச் சனி மற்றும் அஷ்டமச் சனியாக நம்மைப் பாடாய்ப் படுத்துகிறார். அவரைப் பற்றிய பழமொழிகளையும் அவற்றின் அர்த்தங்களையும் அடுத்த பாகத்தில் படிக்கலாம்.
  •              
  • எள், நல்லெண்ணெய், கருப்பு மற்றும் நீல நிற உடைகள் மட்டும் அல்லாமல், சிறந்த உழைப்பாளிகளையும் சனி பகவானுக்குப் பிடிக்கும்.
#சனிப்பெயர்ச்சி2017  #சனிபகவான் #SaturnTransit2017 #சனிப்பெயர்ச்சிபலன்கள்2017





Friday, May 27, 2016

ஆயில்யம் நட்சத்திரப் பெண்கள் மாமியாருக்கு 'ஆகாதவர்கள்' இல்லை!

      தங்கள் பிள்ளைகளுக்குப் பெண் பார்க்கும் பெற்றோர் சில பெண்களை நட்சத்திரத்தின் அடிப்படையை மட்டுமே வைத்து நிராகரித்து விடுகிறார்கள். ஆயில்யம் நட்சத்திரம் அவற்றுள் முக்கியமான இடத்தைப் பிடிக்கிறது. "ஆயில்யம் நட்சத்திரப் பெண் மாமியாருக்கு ஆகாது" என்ற ஒரு பழமொழி(?)க்கான பாதி அர்த்தத்தை வைத்துக் கொண்டு முடிவுகளை எடுக்கிறார்கள். ஆனால் தவறாக அர்த்தம் கொள்ளப் படும் பழமொழிகளில் இதுவும் ஒன்றாகும். ஆயில்யம் நட்சத்திரப் பெண்களைப் பற்றி ஜோதிட நூல்கள் எதிலும் தவறாகக் கூறப்படவில்லை.

         ஆயில்யம் நட்சத்திரம் புதனின் நட்சத்திரம். புதன் நுண்கலைகள், கணிதம், தர்க்க வாதம் (லாஜிக்காகப் பேசுவது), சிறந்த கல்வி இவற்றுக்கெல்லாம் அதிபதி ஆவார். இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் கலைகள், கணிதம், கல்வி போன்றவற்றில் இயற்கையாகவே திறமை உடையவர்களாக இருப்பார்கள். 

    'Creative Arts' எனப்படும் படைப்புக் கலைகளில் ஒன்றான சமையல் கலையில் ஆர்வம் மிக்கவர்களாகவும் திறமை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்; வீட்டை அழகாகப் பராமரிப்பார்கள்; குடும்பத்தின் கணக்கு வழக்குகளில் ஆர்வம் காட்டுவார்கள்;  கேள்வி கேட்பார்கள். இந்தப் பெண்ணின் திருமணத்திற்கு முன் இந்த உரிமைகள் எல்லாம் அவள் மாமியாரின் கையில் அதுவரை இருந்திருக்கும்.  






     ஆகவே ஆயில்யம் நட்சத்திரப் பெண்கள் சமையலறை உரிமையை எடுத்துக் கொள்வது, கணக்கு வழக்குகளில் கேள்வி கேட்பதெல்லாம் மாமியாருக்குப் பிடிக்காது. ஆகவே "ஆயில்யம் நட்சத்திரப் பெண்ணைக் கண்டாலே மாமியாருக்கு ஆகாது (பிடிக்காது)" என்ற கருத்து தான் இவ்வாறு வேறு ஒரு தவறான அர்த்தத்தைக் கொடுக்கிறது. 


      இதற்குப் பரிகாரம் சொல்வதாக ஒன்றைச் சொல்லுவார்கள். "மாமியார் இல்லாத வீட்டிலே கொடுத்தால் இந்தப் பெண்கள் மகாராணியாக வாழ்வார்கள்" என்பார்கள். அதுவும் உண்மை தான். குடும்பத்தின் தலைமையை ஏற்று நடத்த ஒரு பெண் இல்லாத வீட்டிற்கு இந்த நட்சத்திரப் பெண்கள் கிடைப்பது அவர்களுக்கும் அதிர்ஷ்டம்; அந்தப் பெண்ணுக்கும் அதிர்ஷ்டம் தான். 


         இது போன்ற தவறான கருத்துக்களால் தாமதத் திருமணம் இந்த நட்சத்திரப் பெண்களுக்கு நடக்கின்றன. இருந்தாலும் மன வலிமையோடு இவர்கள் இருக்கக் காரணம் ஆயில்யம் நட்சத்திரம் அமைந்திருக்கும் ராசி கடகம். அந்த ராசியில் இருக்கும் சந்திர பகவான் ஆட்சி பெற்று இருப்பதால் மன உறுதி மிக்க பெண்களாக இவர்களைப் படித்திருக்கிறார் இறைவன். அவர் படைப்பில் அனைத்திற்கும் அர்த்தம் உண்டு.

#ஆயில்யம்நட்சத்திரம், #வரன், #மாமியார் 

Wednesday, April 13, 2016

துன்முகி (துர்முகி) வருடத் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 


தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 

         அனைவருக்கும் பூந்தோட்டத்தின் துன்முகி (துர்முகி) வருடத் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். வியாழக்கிழமை பிறக்கும் இந்த ஆண்டு  குரு அருளும் திரு அருளும் பெற்ற சிறந்த ஆண்டாக இருக்க இறைவனின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும். இந்த ஆண்டின் ராஜாவாக சுக்கிரன் இருப்பதால் விவசாயிகளுக்குப் பொன்னான ஆண்டாகவும், மந்திரியாகவும் சேனாதிபதியாகவும் புதன் பதவி வகிக்கப் போவதால் கலைகளுக்கும் கலைஞர்களுக்கும் நல்ல ஆண்டாகவும் இருக்கும். சுபம்!

#துன்முகி #துர்முகி #புத்தாண்டுவாழ்த்துக்கள்

Monday, March 28, 2016

ஜோதிடம் - அர்த்தமும் விளக்கமும்.

             ஜோதிடம் என்பது பலரும் தங்கள் வாழ்க்கையின் முக்கியமான நேரங்களில் பார்க்க நினைக்கும் விஷயம். ஒருவரின் பிறந்த நேரத்தைக் கொண்டு, அப்போது இருந்த கிரக நிலைகளை ஆராய்ந்து தற்கால பலன்களை ஜோதிடர்கள் கூறுகிறார்கள். உண்மையில் இது மட்டுமே ஜோதிடம் என்று நினைத்தால் அதில் உண்மை இல்லை. வானில் உலவும் கிரகங்களை மட்டுமே வைத்துப் பலன் கூறுவது மட்டுமே ஜோதிடம் இல்லை. அந்தக் கலையின் (அல்லது அறிவியலின்) பெயர் வான சாஸ்திரம் அல்லது வானவியல் அல்லது வானியல் ஆரூடம்.  இன்றைய நவீன வானவியல், செயற்கைக் கோள் துணை கொண்டு ஆராய்ந்து கூறும் அதே விஷயங்களை இந்து மதம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே விளக்கி விட்டது. 

அறிவியல் காட்டும் கிரகங்களின் அமைப்பு 

இந்துக் கோவில்களின் நவகிரக அமைப்பு 

                       சரி. இப்போது நாம் கூற வருவது அது அல்ல. ஜோதிடம் என்றால் என்ன என்பதைத் தான் நாம் விளக்க முற்படுகிறோம். நாம் மேலே பார்த்த வான சாஸ்திரம் ஜோதிடத்தின் ஒரு பகுதி மட்டுமே. வான சாஸ்திரம் போலவே - சகுனங்கள், உடற்கூறு லட்சணம், தீர்க்க தரிசனம், வாஸ்து சாஸ்திரம், கைரேகை சாஸ்திரம், மருத்துவம், வானிலை, பட்சி சாஸ்திரம் என்று பல பிரிவுகளை உள்ளடக்கியது தான் ஜோதிடம் என்னும் க(டல்)லை. ஒரு தேர்ந்த ஜோதிடரிடம் மேற்கண்ட அனைத்து விஷயங்களிலும் தன்னை நாடி வரும் மனிதர்களின் சந்தேகங்களுக்கு விடைகள் இருந்தன. 

ஜோதி

                        'ஜோதி இருக்கும் இடம்' என்பதையே 'ஜோதிடம்' என்று அந்தக் கால மக்கள் அழைத்தனர். சில கேள்விகளும் சந்தேகங்களும் ஒருவரை இருளில் வைத்திருக்கும் போது ஒளி என்னும் ஜோதியைத் தேடிச் செல்லும் வேலையைத் தான் 'ஜோதிடம் பார்த்தல்' என்று அழைத்திருக்கிறார்கள். பொதுவாக இருட்டில் இருக்கும் மக்கள் தான் ஜோதியைத் தேடிச் செல்ல வேண்டும். ஜோதி அவர்களைத் தேடி வராது. 
             
            (ஆனால் இன்றைய ஜோதிடம் நவீனமாகி, தன்னுடைய இதர பிரிவுகளை இழந்து வான சாஸ்திரத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இருக்கிறது. உண்மையில் ஜோதிடத்தின் ஒவ்வொரு பிரிவும் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையது. உடல் கூற்றியல், வான சாஸ்திரம், மருத்துவம் என்று அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையவையே.)


#jothidam, #ஜோதிடம் #தமிழ்ஜோதிடம் 

Tuesday, July 14, 2015

சனிக் கிழமைகளில் காகத்திற்கு உணவு அளிப்பதும் - உடல் ஆரோக்கியமும்!

                      சனிக் கிழமைகளிலும் அமாவாசை நாட்களிலும் காகத்திற்கு உணவு வைப்பது என்பது நமது முன்னோர்கள் நமக்குக் கற்றுக்கொடுத்த நல்ல பழக்கங்களில் ஒன்று. அமாவாசை நாட்களில் இறந்த நமது முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காகக் காகங்களுக்கு உணவு அளிக்கப் படுகிறது. சனிக் கிழமைகளில் சனி பகவானின் அருளைப் பெறுவதற்காக, காகத்திற்கு உணவு அளிக்கப் படுகிறது. சனி பகவானின் வாகனம் காகம்; நமது இந்து சாஸ்திரத்தில்  சனி பகவானை 'ஆயுள் காரகன்' என்று குறிப்பிடுகிறார்கள். அதாவது, 'சனியின் அருள் இருந்தால் ஆயுள் மேன்மை அடையும்; ஆயுள் அதிகரிக்கும்' என்பது இந்து மதத்தின் நம்பிக்கை. ஆயுள் என்பது ஆரோக்கியத்தைச் சார்ந்த விஷயம். ஆரோக்கியம் நன்றாக இருக்கும் ஒருவருக்கு ஆயுள் அதிகரிக்கும் என்பது மருத்துவ உண்மை. 

காக வாகனத்தில் சனீஸ்வரர் 
                ஆரோக்கியம் என்பது சுற்றுச் சூழல் சார்ந்த விஷயமும் கூட. சுற்றுபுறத் தூய்மை நன்றாக இருக்கும் இடத்தில் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். காகங்கள் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக்கும் பணியைச் செய்பவையாகும். (அதனால் தான் காக்கைகளை 'சுத்தம் செய்யும் பறவைகள்' - Scavenger Birds என்று அழைக்கிறார்கள்.) நமது வீட்டைச் சுற்றியிருக்கும் குப்பைகள், மற்றும் விலங்குகளின் கழிவுகள் போன்றவற்றைத் தனது உணவாக்கிக் கொள்ளும் தன்மை காகங்களுக்கு உள்ளது. வாரம் ஒருமுறை உணவு வைக்கப்படும் வீடுகளைச் சுற்றிக் காகங்கள் திரிந்து கொண்டே இருக்கும்.

காகங்களுக்கு அளிக்கப் படும் உணவு 
                           தனக்கு வைக்கப் படும் உணவையும் தனியாக உண்ணாமல் மற்ற காகங்களையும் அழைத்து வந்து சாப்பிடுபவை காகங்கள். அவை உணவைச் சாப்பிட்டுவிட்டு, சுற்றுப்புறத்தில் இருக்கும் அழுக்குகளையும் சாப்பிட்டுச் சுத்தப்படுத்துகின்றன. காகங்கள் திரிந்து கொண்டே இருக்கும் வீடுகளின் சுற்றுபுறம் தூய்மையாக இருக்கும். இதனால் அந்த வீட்டில் வாழும் மனிதர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கிறது. ஆயுளும் காக்கப் படுகிறது. வாரம் ஒரு முறையாவது உணவு அளிக்கப் படுவதால் காக்கை இனமும் காக்கப் படுகிறது.
                 
             அறிவியல் பூர்வமான விளக்கங்களாக சொல்லப்படாமல், மத நம்பிக்கையாக, குறிப்பால் உணர்த்தப் பட்டிருக்கும் உன்னதமான ஒரு பழக்கத்தைத் தான் நாம் இன்றளவும் கடைப்பிடிக்கிறோம்.

 #சனி #சனி பகவான் #ஆரோக்கியம் 

Thursday, February 5, 2015

சூரியனின் ஏழு குதிரைகளும் ஒளியின் ஏழு நிறங்களும்.

         இந்து மதத்தில் சூரியனை இறைவனாகவும், நவக்கிரகங்களில் முதல் கிரகமாகவும் வைத்து வழிபாடு செய்கிறார்கள். அவரே வெப்பம் மற்றும் ஒளியின் கடவுள். இந்து மத நம்பிக்கையில் சூரிய பகவானின் வாகனமாக ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட ரதம் அமைக்கப்பட்டுள்ளது.

ஏழு குதிரைகள் உடைய ரதத்தில் சூரிய பகவான் 
     பழைய கோவில்களில் சூரிய பகவானுக்கென்று தனி சன்னிதி அமைக்கப்பெற்று அதில் அவர் ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் இருப்பது போல் சிலைகள் அமைக்கப் பட்டிருப்பதைப் பார்க்கின்றோம்.


             
                   இந்த ஏழு குதிரைகள் எதற்கு? ஒரு குதிரை போதாதா? இதில் ஒளியின் தத்துவத்தை ஒளிக் கடவுளின் சிலை வடிவமைப்பில் கொடுத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். சூரியனின் ஒளி வெள்ளை நிறமுடையது. உண்மையில் வெள்ளொளி என்பது ஏழு நிறங்களின் தொகுப்பே. அவை  - ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், இளஞ்சிவப்பு மற்றும் சிவப்பு (VIBGYOR - Violet, Indigo, Blue, Green, Yellow, Orange, Red) ஆகியவையே.


Dispersion of light in a glass prism 

ஏழு  நிறங்களாகப் பிரியும் வெள்ளை ஒளி 

        Prism எனப்படும் பட்டகத்தில் வெள்ளொளி உட்புகும் போது அது ஏழு வண்ணங்களாகப் பிரியும். வானவில்லின் தத்துவமும் அதுவே. மழை பெய்யும் போது மழை நீர் பட்டகம் போல் செயல் பட்டு வெள்ளொளியை ஏழு வண்ணங்களாகப் பிரிக்கிறது. அதாவது வானவில்லில் தோன்றும் ஏழு வண்ணங்களும் வெள்ளை ஒளியில் இருக்கும் ஏழு வண்ணங்களாகும்.  

வானவில்லின் ஏழு வண்ணங்கள் 

              வெள்ளை நிறத்தை வழங்கும்  ஒளிக் கடவுளான சூரிய பகவானுக்கு ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட தேரை வடிவமைத்ததன் மூலம் 'வெள்ளொளியில் இருக்கும் ஏழு வண்ணங்கள்' தத்துவம் தெளிவாக உணர்த்தப்பட்டுள்ளது. இது நமது முன்னோர்களால் கோவில்களில் பாதுகாத்து வைத்துச் செல்லப்பட்ட  அறிவியல்.


#சூரியன் #சூரிய பகவான் #VIBGYOR #ஏழு குதிரைகள் 

Tuesday, November 11, 2014

அக்ஷய திரிதியை என்றால் என்ன?


                ஒவ்வொரு தமிழ் வருடம் சித்திரை மாதமும் நகைக் கடைகளால் அடையாளம் காட்டப்படும் திருநாள் தான் அக்ஷய திரிதியை. நகைக் கடைகள் அனைத்தும் போட்டி போட்டுக் கொண்டு தள்ளுபடிகள், பரிசுகள், இலவசங்கள் என்று அள்ளி அள்ளித் தருவதாக  விளம்பரப் படுத்திக் கலகலத்துக் கொண்டாடிவிடும். உண்மையில் இந்த அக்ஷய திரிதியை என்றால் என்ன? தங்கத்திற்கும் இந்த தினத்திற்கும் என்ன சம்பந்தம்? அக்ஷய திரிதியையில் பொன் வாங்கினால் செல்வம் பெருகுமா? சங்கடங்கள் தீருமா?


அருள் தரும் திருமகள் 


            இந்த நாளைப் பற்றிப் புராண, இதிகாச மேற்கோள்கள் பல உண்டு,  பரசுராமர் அவதரித்த தினம், மகாபாரதத்தில் யுதிஷ்டிரன் அக்ஷய பாத்திரம் பெற்ற தினம், பாற்கடலில் மகாலட்சுமி அவதரித்து, மகாவிஷ்ணுவை அடைந்த தினம் என்று பல மேற்கோள்கள். சரி... இந்த அக்ஷய திரிதியைக்கும் தங்கத்திற்கும் என்ன சம்பந்தம்? 

திரிதியை நிலவு 
                   இந்த வார்த்தையைப் பிரித்துப் பார்த்தால் பொருள் அறியலாம். 'க்ஷய' என்றால் 'தேய்கிற' என்று பொருள். 'அக்ஷய' என்பது அதன் எதிர்ப் பதம். அதாவது, 'வளர்கிற' என்று பொருள். நமது முந்தைய பதிவு ஒன்றில் திதிகள் பற்றிப் பார்த்திருக்கிறோம். ஒவ்வொரு மாதத்திலும் வளர்பிறையிலும், தேய்பிறையிலும் வரக்கூடிய மூன்றாவது திதி திரிதியை திதி. 'அக்ஷய திரிதியை' என்றால் 'வளர்பிறைத் திரிதியை' என்பது மட்டுமே சாஸ்திரங்கள் கொடுக்கும் விளக்கம். பொதுவாகவே மூன்றாம் பிறையான திரிதியை திதி நல்ல நாளாக மக்களால் பார்க்கப் படுகிறது; ஆகவே அந்தக் காலத்தில் வருடத்தின் முதல் மாதமான சித்திரையின் வளர்பிறை மூன்றாம் நாளில் புதுக்கணக்கை ஆரம்பிப்பதோ தானியங்கள் வாங்குவதோ செய்யப்பட்டிருக்கலாம். மேலும் வேறு ஏதேனும் வாங்குவதும் அந்த நாளில் செய்யப்பட்டிருக்கும்; அதனால் ஒரு துவக்கத்தின் அடையாளமாகவே சித்திரை வளர்பிறை மூன்றாம் நாள் பார்க்கபட்டிருக்கலாம். அதுவே தொடர்ந்தும் இருக்கலாம். தங்கம் மட்டுமே இப்போது விளம்பரமும் வியாபாரமும் படுத்தப் படுகிறது.

அக்ஷய திரிதியை விற்பனை 

              இந்த நாளில் தான தருமங்கள் செய்வது நல்லது என்பதும் உண்மை; அது ஏனோ பிரபலமாகவில்லை. முனிவர்கள் யாகங்கள் செய்ய ஆரம்பிக்கத் தேர்ந்தெடுப்பதும் இந்த நாளைத்தான். இந்த நாளில் இறைவனின் அருளைப் பெற வேண்டுமானால் தங்கம் வாங்க வேண்டும் என்ற நம்பிக்கை தவறு. தங்கம் வாங்க முடிந்தவர்களுக்கு ஒரு விதமான அருளையும் வாங்க முடியாதவர்களுக்கு ஒரு விதமான அருளையும் இறைவன் வழங்குவதில்லை; அவன் அருள் அந்த வானத்தைப் போன்று அனைவருக்கும் பொதுவானது.
#அக்ஷய திரிதியை #தங்கம்

Tuesday, June 10, 2014

புத்திக் காரகன் புதன் - கிரேக்க, இந்து மதங்களின் பார்வையில்...

             
        உலகின் தொன்மையான நாகரிகங்களில் தமிழ் நாகரிகமும் கிரேக்க நாகரிகமும் முக்கிய இடத்தைப் பெறுபவை. இரண்டும் சமகால நாகரிகங்கள். மேலும் இந்த இரண்டு நாகரிகங்களிலும் பின் தொடரப்பட்ட வழிபாட்டு முறைகளும் ஒன்றுகொன்று தொடர்பு உடையவையாக இருக்கின்றன. மத நம்பிக்கைகளும் இந்த இரண்டு நாகரிகங்களிலும் ஒன்று போலவே இருந்திருக்கின்றன. இந்து மதத்தால் விஞ்ஞானப் பூர்வமாக அறியப் பட்ட உண்மைகளே கிரேக்க மதமான பாகனிசத்திலும் (Paganism) அறியப்பட்டுள்ளது.
            தமிழ் ஜோதிட சாஸ்திரத்தில் புத்திக் காரகனான புதனுக்கு ஆங்கிலத்தில் 'மெர்குரி' (Mercury) என்று பெயர். 'பாதரசம்' என்று தமிழில் குறிக்கப்படும் திரவ உலோகம் தான் இந்த மெர்குரி. பாதரசம் ஒரு உலோகம். ஆனால் அது திரவ நிலையிலேயே இருக்கும்.  திரவப் பொருளில் திடப் பொருளின் குணங்கள் அடங்கியது தான் மெர்குரி. அது திடப் பொருளுடன் சேரும் போது திடப் பொருளின் தன்மைகளையும், திரவப் பொருளுடன் சேரும் போது திரவத்தின் தன்மையையும் பெறுகிறது.

                                                               
                                                                                             புதன் கிரகம் 


பாதரசம்  (Mercury)

        தமிழ் ஜோதிட  சாஸ்திரத்தைப் பொறுத்தவரை, புதனை 'அலி கிரகம்' என்று குறிப்பிடுகின்றனர். அதாவது, ஆணின் குணங்களும் பெண்ணின் குணங்களும் இணைந்த ஒரு கிரகம். ஆண் கிரகங்களுடன் (உ-ம்: செவ்வாய்) சேரும் போது ஆண் கிரகமாகவும் பெண் கிரகங்களுடன் (உ-ம்: சுக்கிரன்) சேரும் போது பெண் கிரகமாகவும் தன்மைகளைப் பெறுகிறது. பாவக் கிரகங்களுடன் சேரும் போது பாபத் தன்மையையும் சுபக் கிரகங்களுடன் சேரும் போது சுபத் தன்மையையும் பெற்று விடுகிறது.


புத பகவான் 


கிரேக்கத்தில் புத பகவான் (Lord Mercury in Greek Mythology )

       புதன் கிரகத்தின் இந்த குணாதிசயம் இரண்டு நாகரிகங்களிலும் வெவ்வேறு விதங்களில் உணர்த்தப் பட்டிருந்தாலும்  பொதுவான தன்மைகள் ஒன்றாகவே இருக்கின்றன. (Though the interpretations are different, the properties are the same.) பார்வைகள் தான் வேறு; விஷயம் ஒன்று...